சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Saturday, March 26, 2005

 

டாக்டர்னா பெரிய பருப்பா நீ?

"இஞ்சினியரிங் காலேஜ் படிக்கும் போது சக மெடிக்கல் ஸ்டூடண்ட பாத்து, ஹே...பாடு! டாக்டர்னா பெரிய பருப்பா நீ? நானு மெஷின் ஸ்பேர் பார்ட்ட பத்தி படிக்கிறேன். நீ, மனுஷங்களைப் பத்தி" அப்டீன்னு உதார் உட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இது மாதிரி செய்தி படிக்கும் போது சுரீர்-னு உறைக்கிது.

Image hosted by TinyPic.com

ரெட்டைத் தலையோட பிறந்த இந்த 10 மாச குழந்தையோட இரண்டாவது தலையை சமீபத்தில, பிரிச்சி எடுத்துருக்காங்க-ங்கற நியூஸ நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்.

கெய்ரோ-ல இருக்கிற குழந்தைகள் ஆஸ்பத்திரியில வெச்சி செஞ்ச, 13 மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு, இப்போ இக்குழந்தை நலமா இருக்கிறா.

ஆபரேஷன் செஞ்ச டாக்டர்ங்க சொல்றது என்னான்னா...மொத தலையை மூளை வரைக்கும் போய் பிரிக்கிற வரைக்கும், இரண்டாவது தலை சிரிச்சிகிட்டும், கண் இமைச்சிட்டும் இருந்திச்சாம்.

10 மாசமா தவழ்றதுக்கும், பாரமான தலைய வச்சிகிட்டும், கஷ்டப்பட்ட இந்த குட்டிப்பாப்பா இப்போ சந்தோஷமா இருக்குதாம்.

எப்படியாப்பட்ட மனுஷனையும் ஒரு நிமிஷம் மனசு நெகிழ்ச்சியாக்குது இந்த சம்பவம்.

இப்பம்லாம் டாக்டர்கள மரியாதையாவே பாக்கறேன்.

கருத்துக்கள்:
This is really a great achievement, thought it is a rare event! But, 90% of the doctors are just like any other profesional -- money minded. Nobility is not there anymore.

enRenRum anbudan
BALA
 
கருத்து சொன்னதுக்கு நன்றிங்க பாலா!

டாக்டர்களால நொந்தவங்க லிஸ்ட்-ல நீங்களும் இருக்கீங்க போலிருக்கு. சீட் கிடைக்க "கொடுக்க" ஆரம்பிக்கறவங்களுக்கு, கொடுத்தத திருப்பி எடுக்கறதுக்கு பேஷண்ட வுட்டா வேற ஆளு யாரு இருக்கா?

"கொடுக்கற/வாங்கற" முறையை மக்களே தடை செய்ற வரைக்கும் நீங்க சொல்ற Money Minded ஆளுங்க இருந்துகிட்டுதான் இருப்பாங்கன்றதுதான் வருத்தமான விஷயம்.
 
உங்க வருகைக்கு நன்றிங்க மூர்த்தி...

மதுரையில உள்ள மிகப் பிரபல மருத்துவமனையில சமீபத்தில எனது உறவினர் ஒருத்தரது மரணம் "ரமணா" ரேஞ்சுக்கு ஆச்சு... ஆறாத வடு போல அந்த சம்பவம் மனசில பதிஞ்சு போனாலும், மேற்கண்ட பதிவு மாதிரி சில நிகழ்வுகளால மனசு சமாதானம் ஆகுது.

எது எப்படின்னாலும், மருத்துவரா இருக்கிறவங்க, அவசியம் மனிதாபிமானம் உள்ளவங்களா இருக்க ஆண்டவனை வேண்டிக்குவோம்.
 
எல்லோரும் மருத்துவர்கள் மேலே அநியாய கடுப்பில் இருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஒரேயடியாக எல்லா மருத்துவர்களையும் குற்றஞ்சொல்வது நியாயமில்லை.

முன்னாடியே இந்த பதிவில் ஒரு அன்பர் கூறியபடி, வலைப்பதிவுகளில் பின்னூட்டமிட்வதே, நம் வலைப்பதிவிற்குதான் எங்கிற பாரம்பரிய வழியிலே நானும்..

ஆனால், இந்த பின்னூட்டங்களுக்கு சிறிது சம்பந்தப்பட்ட எனது பதிவு
இதோ

நன்றி.
 
"என்ன செலவானாலும் பரவாயில்லை டாக்டர்", என்று மருத்துவரிடம் சொல்வது இமாலய தவறு என்பதை செயலால் உணர்த்தியவர்கள்.

"ஓ! அந்த டாக்டரா, அவரிடம் ஆபரேசன் செய்தால், அவருக்கு நிரந்தர கஸ்டமராகிவிடுவாய்" என்று கமென்ட் அடிக்க வைத்தவர்கள்.

தனக்கு கிடைக்கும் கமிஷனுக்காக, எக்ஸ்ரே முதல் ஈ.சி.ஜி வரை வேண்டுபவர்கள்.

பிரசவத்துக்கு முந்தைய வார சோதனையில், "குழந்தை சிக்கலான இடத்திற்கு நகர்ந்துவிட்டது. ஆபரேஷன் செய்யாவிட்டால் தாய் உயிருக்கு ஆபத்து" என்று சொல்லி கழுத்துக்கு கத்தி -மன்னிக்கவும்- வயிற்றுக்கு கத்தி வைப்பவர்கள்.

வட்டிக்கு வாங்கிய பணத்தில் புதிய கிளினிக் ஆரம்பித்து, வருகை தரும் வயிற்றுப்போக்கு நோயாளிகளை தங்கிவிட்டு போகச்சொல்லும் தனவந்தர்கள்.

கண் நோய் பார்க்க வந்த பெண் நோயாளியிடம், அறையை இருட்டாக்கி, கண்களில் வெளிச்சம் அடித்து கால்களால் சுரண்டும் எலிகள்

என ஒரு சிலர் இருந்தாலும்,


நோயாளியின் பிரச்சினை, குணம், சூழ்நிலை அறிந்து மருத்துவம் பார்க்கும் பலர் உண்டு.

முண்டாபனியனுடன் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் திறமையான டாக்டரை சந்தித்திருக்கிறேன். மருத்துவ சேவையை இறைச்சேவையாக நினைக்கும் எத்தனையோ மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

ஏழைகளுக்கு இலவச பிரிவு வைத்திருக்கும் புகழ்பெற்ற மதுரை அரவிந்த் கண் மருத்துவனையும் நம் கண்ணெதிரில்தான் இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு நாள் வெளிவூர் முகாம் சென்று இலவசமாக மருத்துவம் பார்க்கும் பல டாக்டர்கள் இந்த உலகத்தில்தான் இருக்கிறார்கள்.

சார்ஸ் நோயின் ஆரம்பக்கட்டத்தில் அந்நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து தனது உயிரை இழந்த மருத்துவர்களை நினைவு கூர்வோம்.

வளர்க தூய்மையான மருத்துவ சேவைகள்.

-அபூ உமர்-
 
தலீவா, சிங்கை முரசு பதிவில் உள்ள உங்க கேள்விக்கு என் பதிலை அங்கு சென்று பார்க்கவும்.

http://singaimurasu.blogspot.com/2005/03/blog-post_31.html
 
பெர்ஸு பெர்ஸா ஜாம்பவான்ங்க எழுதற தமிழ்மணத்தில பொடிப்பசங்க கிறுக்கறத எல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு ஒரு வகையான காம்ப்ளக்ஸோட இருந்த எனக்கு, ஒங்க ஸ்டார் ரேட்டிங் கொஞ்ச சந்தோஷமும் (விட்டமின் காம்ப்ளக்ஸ்?மாதிரி) நெறையா ஊக்கமும் கொடுக்குது.

தர்ம அடிய போட்ட எல்லாருக்கும் நன்றி!
 
Post a Comment



<< Home